Search a song (Type in tamil for better results)

Saturday, December 19, 2015

ஆதி திருவார்த்தை திவ்ய - Aathi thiru vaarthai dhiviya


ஆதி திருவார்த்தை திவ்ய 
ஆதி திருவார்த்தை திவ்ய 
அற்புத பாலனாக பிறந்தார் 
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட 
ஆதிரையோரை யீடேற்றிட   

மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து 
மரியாம் கன்னியிட முதித்து 
மகிமையை மறந்து தமை வெறுத்து 
மனு குமாரன் வேஷமாய் 
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் 
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் 
உன்னத காதலும் பொருந்தவே சர்வ 
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்   

தாம் தாம் தன்னர வன்னர 
தீம் தீம் தீமையகற்றிட 
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ- 
ஷமென சோபனம் பாடவே 
இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது 
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட   

ஆதாம் ஓதி ஏவினார் 
ஆபிரகாம் விசுவாசவித்து 
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் 
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்   

பூலோக பாவ விமோசனர் 
பூரணக் கிருபையின் வாசனர் 
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் 
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்   

அல்லேலூயா சங்கீர்த்தனம் 
ஆனந்த கீதங்கள் பாடவே 
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட 
அற்பரன் மெய்பரன் தற்பரனார். 

No comments:

Post a Comment