Search a song (Type in tamil for better results)

Friday, April 29, 2016

உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் - Ummodu iruppathu thaan ullaththin


உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா
உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு - Kiristhuvukkul vaazhum enakku


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3

என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்

பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

நல்லவரே என் இயேசுவே - Nallavarae en yesuve naan paadum paadalin


நல்லவரே என் இயேசுவே
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே

நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேனையா

என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் இயேசுவே

அழைத்தவரே! அழைத்தவரே! - Azhaiththavarae Azhaiththavarae en oozhiyaththin


அழைத்தவரே! அழைத்தவரே!
அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே

எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்

வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க - Enthan ullam puthu kaviyaale ponga


எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்

சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே - அல்லேலூயா

சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா

பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா

களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் - அல்லேலூயா

என்னை உம் கையில் படைத்தேன் - Ennai um kaiyil padaiththaen muzhuvathumaai


என்னை உம் கையில் படைத்தேன்
என்னை உம் கையில்
படைத்தேன்  முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்  -2

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே -2

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிருத்திடுமே ...

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் -2

ஆராதிக்கின்றோம் - உம்மை ஆராதிக்கின்றோம் - Aaraathikintrom ummai aaraathikintrom


ஆராதிக்கின்றோம் - உம்மை ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் - உம்மை
ஆராதிக்கின்றோம்
இரட்சக தேவா - உம்மை
ஆராதிக்கின்றோம்

மாட்சிமை உள்ளவரே - எல்லா
மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என் நேசரே
துதிக்கு பாத்திரரே

என் பெலவீன நேரங்களில்
உம் பெலன் என்னை தாங்கினதே
ஆத்துமாவை தேர்றினீரே
கிருபை கூர்ந்தவரே

வாழ்க்கையின் பாதையிலே
எனக்குதவின மா தயவே
க்ந்ஞ்சுகிறேன் கிருபையினை
உமக்காய் வாழ்ந்திடவே

பிதாவே ஆராதிக்கின்றோம் - Pithaavae aaraathikintrom


பிதாவே ஆராதிக்கின்றோம்
பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

மகளாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் - Ummai nokki paarkintraen ummai


உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம் - (4)

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்

கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம் - Kai thatti paadi magilnthiruppom


கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கைத்தட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில் களிகூறுவோம்

களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் 
சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார்

நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களேல்லாம்

அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
ஆலோசனை அவர் தருவார்

ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே

வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்

பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்

உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் - Bayappada maattaen naan bayappada maattaen


பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
பயப்பட மாட்டேன் நான் 
பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்

உதவி செய்கிறார், 
பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் 
கூட வருகின்றார்

காற்று வீசட்டும் 
கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் 
இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம், 
மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை 
அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற 
கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் 
செய்ய பெலன் உண்டு

பரம அழைத்திலின் 
பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் 
படகை ஓட்டுவோம்

உலகில் இருக்கிற 
யாவையும் விட‌
என்னில் இருக்கிற 
இயேசு பெரியவர்