Search a song (Type in tamil for better results)

Wednesday, January 4, 2017

ஞானியாக பிறந்திருந்தால் ஞானத்தை பரிசளிப்பேன் - Ngaaniyaaga piranthirunthaal ngaanaththai parisalippaen


ஞானியாக பிறந்திருந்தால் ஞானத்தை பரிசளிப்பேன்
ஞானியாக பிறந்திருந்தால்
ஞானத்தை பரிசளிப்பேன்
ஆயனாக பிறந்திருந்தால்
மந்தையை பரிசளிப்பேன்
பேத்தலை பிறந்த பாலனே
உமக்கு பரிசளிக்க
சிறந்தது என்று என்னிடம்
ஏதும் இல்லையே
என்னையே தருகின்றேன்

படைக்கின்றேன் படைக்கின்றேன்
என்னையே காணிக்கையாய்
ஆயர் ஞானியர் படைத்தது போல்
சிறந்ததை படிக்கின்றேன்

சத்திரத்தில் இடம் இல்லை
தொழுவம் தான் கிடைத்ததோ
வான் புவி படைத்த ராயனுக்கு
புல்லனை தான் மெத்தையோ
என்சிறு உள்ளம் தருகின்றேன்
பாலா நீர் பிறந்திட
என்றும் நீர் தாங்கும் ஆலயமாய்
என்னுஉள்ளம் பிறந்திடும்
என்னையே தருகின்றேன்

என்னை தேடி இப்புவி வந்தீர்
உம்மை பணிகின்றேன்
என்னை உமக்கென முன் குறித்தீர்
நன்றி சொல்கிறேன்
தாலந்து திறமை அனைத்தையுமே
உம பாதம் அர்ப்பணித்தேன்
கல்வி ஞானம் எல்லாமே
உமக்கே தருகின்றேன்
என்னையே தருகின்றேன்