Search a song (Type in tamil for better results)

Thursday, September 22, 2016

திருக்கரத்தால் தாங்கி என்னை - Thirukkarathaal thaangi ennai


திருக்கரத்தால் தாங்கி என்னை
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை 

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே - Ummai aaraathikka koodi vanthom nallavarae


உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை(6) உமக்குத்தானே

நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை
மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை
உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

Saturday, September 17, 2016

என்னை காக்கக் காத்தர் உண்டு - Ennai kaakka karthar undu


என்னை காக்கக் காத்தர் உண்டு
என்னை காக்கக் காத்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணிப் போல காப்பார்

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுறங்காமல் காப்பார்

பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே

சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னை
காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூழையில் நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு - Aazhamaana aazhiyilum aazhamaana anbu


ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு

இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு

இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு

குழியில் விழுந்தோரை
குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை
எடுத்து நிறுத்தும் அன்பு
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு

மனிதர்கள் மாறினாலும்
மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட
மகா பெரிய அன்பு
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு

சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் - Chinna manushanukkulla periya aandavar


சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்

தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம்
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா கிக்ஷீனீஹ்
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

உம்மை நேசிப்பேன் - Ummai naesippaen


உம்மை நேசிப்பேன்
உம்மை நேசிப்பேன்
நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே

ஆராதனை, ஆராதனை
ஆராதனை, ஆராதனை

மாறாதவர் நீர் மாறாதவர்
என் இயேசு நீர் மாறாதவர்

உங்க ஆவியை அனுப்புங்க - Unga aaviyai anuppunga


உங்க ஆவியை அனுப்புங்க
உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே

உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஒடிட 
உயிரடைய வேண்டுமே

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் 
உயிரடைய வேண்டுமே

இயேசு நாமம் உயர்ந்த நாமம் - Yesu naamam uyarntha naamam


இயேசு நாமம் உயர்ந்த நாமம்
இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம்

மரணத்தின் வல்லமைகள்
தெறிப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
பாதாள சங்கிலிகள்
அறுப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
மரணத்தை அவர் ஜெயித்திட்டார்

பாவத்தின் வல்லமைகள்
உடைபட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
வியாதியின் வல்லமைகள்
விலகியே போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

தடைசெய்த மதில்கள்
தளர்ந்து போய் விழுகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
எரிகோவின் வல்லமைகள்
பயந்துபோய் ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் - Thookki sumappeerae vaal naal ellaam


தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

குழப்பங்கள் என்னை குழப்பும் போது
குழந்தை போல நான் உம்முன் வருவேன்
போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்

பாரங்கள் என்னை அழுத்தும் போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும் போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்

வல்ல கிருபை நல்ல கிருபை - Valla kirubai Nalla kirubai


வல்ல கிருபை நல்ல கிருபை
வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே

அல்லே அல்லே லுயாயாயா

அக்கினியின் சூழையில் 
வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
என் முடி கூட கருகாமல் 
புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே

பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில் 
நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே

வழி தப்பி திரிந்த எனக்கு - Vazhi thappi thirintha enakku


வழி தப்பி திரிந்த எனக்கு
வழி தப்பி திரிந்த எனக்கு 
வாழ்வு தந்த நாயகா
வாழ்நாள் எல்லாம் நானே
விழி இழந்தவர்க்காய் வாழ்வேன்

இருளில் வாழ்வோர் எல்லாம்
இலக்கினை ஒருபோதும் அறியார்
இயேசுவின் ஒளியை பெற்றோர்
இனியும் சும்மா இருக்கலாமோ!

உளையான சேற்றில் மாந்தர் 
உதைத்து பயனின்று அழிகிறார்
உன்னதம் தேடும் விசுவாசியே
உனக்கு கவலை இல்லையா?

கந்தை அணிந்த கர்த்தரை 
சிந்தையில் வைக்க மறந்து
பந்தாவில் மயங்கி நிற்போரை
சொஸ்தமாக்க கூவிடு தேவஜனமே

குற்றுயிராய் கிடக்கிறார் வழியில்
குற்றமில்லா இயேசுவின் இரத்தம் உண்டு
குறைநீக்க நீயும் உதவிடு
குதித்திடு இன்பங்கள் ஒதுக்கியே.

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் - En jeevan aanaalum saavanaalum


என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் 
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா 
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்

திறப்பில் நிக்க தவரினேனே 
தேசம் அழியாமல் காத்திடவே
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர்
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் 
தேடிடவே மறந்திட்டேனே
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்
நித்தம் உம் வழி செய்திடவே

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் 
கள்ளனையும் மற்றும் விந்தை
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர்
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே

உலகின் மாயை வலையில் விழுந்தேன் 
தப்பிடமல் சிக்குண்டேனே
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர்
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை

எப்போ வருவீர் என் ஜேசுநாதா 
காத்திருப்பேன் ஏங்கிடுவேன்
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர்
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே

நிறைவான ஆவியானவரே - Niraivaana aaviyaanavarae


நிறைவான ஆவியானவரே
நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் - Ennai um kaiyil padaiththaen


என்னை உம் கையில் படைத்தேன்  முழுவதுமாய்
என்னை உம் கையில்
படைத்தேன்  முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிருத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு - Ummai pola yarundu


உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்

கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே 

மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா

அதிசங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் - Athisayangal seikiravar


அதிசங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அதிசங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்(2)
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்
மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)
புயல் காற்றைத் தம் ஆணையாலே
அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

நன்றியோடு நல்ல தேவா - Nandriyodu nalla deva


நன்றியோடு நல்ல தேவா
நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்

குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே

உயர்விலும் தாழ்விலும்-என்
துணையாக வந்தீரே நிறைவிலும்
என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே

சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்கும் ஜீவன் தந்தவரே

உனக்கொருவர் இருக்கின்றார் - Unakkoruvar irukintraar


உனக்கொருவர் இருக்கின்றார்
உனக்கொருவர் இருக்கின்றார்
உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்

சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை

ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே என்று 
உன்னை தேற்றிட்வே

வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச்
சொல்லிப் புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே

கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம 
கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று 
சொல்வதெல்லாம் சும்மாங்க 
யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க

இந்தமட்டும் காத்த எபிநேசரே (ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே) - intha mattum kaatha ebinaesarae (Sthoththarippom naame thuthigaludanae)


இந்தமட்டும் காத்த எபிநேசரே 
(ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே)
இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே

பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

உலகம் தோன்றும் முன்னே உன்னை - Ulagam thontrum munnae


உலகம் தோன்றும் முன்னே உன்னை
உலகம் தோன்றும் முன்னே உன்னை
தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்

கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்

என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் - Ennai thappuviththu ennai thaangidum


என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்
என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும் 
என்னை ஏந்திடும் தெய்வமே 
எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து 
பாராட்டும் தெய்வமே

ஆராரிரோ...

நெரிந்து போன இந்த நாணலை
என்றும் முறியாதவர் 
மங்கியெரியும் இந்த திரியையும்
என்றும் அணையாதவர்

நெருக்கப்பட்டடும் நான் 
ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை
துன்பப்பட்டும் நான் தள்ளப்படும் 
மடிந்து போவதில்லை

தாய் தன் பிள்ளையைதான் மறந்தாலும் 
நீர் என்னை மறந்ததில்லை
உலகம்தான் என்னை வெறுதாலும்
நீர் என்னை வெறுக்கவில்லை

Ennai thappuviththu Ennai thaangidum
Ennai Yenthidum deivame
Eththanai anbu neer ennil vaithu
paaraattum deivame

Aaraareroo ...

Nerinthu pona intha naanalai
Entrum muriyaathavar
Mangi eriyum intha thiriyaiyum
Entrum anaiyaathavar

Nerukkapattum naan odukkapattum
manamurivadaivathillai
thunbapattum naan thallappattum
Madinthu povathillai

Thaai than pillaiyai thaan maanthaalum
Neer ennai maranthathillai
ulagam ennai veruthaalum
neer ennai verukkavillai