Search a song (Type in tamil for better results)

Thursday, February 16, 2017

நன்றி பலி பீடம் கட்டுவோம் - Nandri pali peedam kattuvom


நன்றி பலி பீடம் கட்டுவோம்
நன்றி பலி பீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்

பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால்
தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்

குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

இதய பெலவீனம் நீக்கினீரே
சுகர் வியாதிகள் போக்கினீரே
அல்சர் இல்லாமல் காத்தீரே
ஆஸ்மா முற்றிலும் நீக்கியதே

நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
அணைக்கும் கணவனை தந்தீரய்யா
அன்பு மனைவியை தந்தீரய்யா

ராஜா நீர் செய்த நன்மைகள் - Rajaa neer seitha nanmaigal


ராஜா நீர் செய்த நன்மைகள்
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)

அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2

வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா

துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா

Friday, February 10, 2017

தேவ பிரசன்னம் ஏங்குதே கதறுதே (பிரசன்னம் பிரசன்னம்) - Deva pirasannam (Pirasannam pirasannam)


தேவ பிரசன்னம் ஏங்குதே கதறுதே (பிரசன்னம் பிரசன்னம்)
தேவ பிரசன்னம்(4)
ஏங்குதே கதறுதே 
என் உள்ளம் துடிக்குதே

பிரசன்னம் பிரசன்னம்
மகிமையின் பிரசன்னம்
மாறாத பிரசன்னம்
தேவ பிரசன்னம்

மலை போன்ற சோதனை நேர்ந்தாலும்
இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும்
சத்ருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும்
சவால்கள் என்னை தகர்க்க செய்தாலும்
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன்

கர்த்தரின் நாமம் பெலத்த துருகமே
சுகமாய் இருப்பான் நீதிமான் அதற்குள்
பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும்
உம் பிரசனத்தால் உருகி போய் விடும்
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன்

உம் சமுகம் எனக்கு முன்பாக சென்றிடும்
இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர்
உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
நீர் என்னோடு என்றும் கூடவே வருவதால்
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன்

உமக்கு நன்றியப்பா இயேசப்பா - Umakku nandri appaa iyaesappaa


உமக்கு நன்றியப்பா - இயேசப்பா
உமக்கு நன்றியப்பா
உமக்கு நன்றியப்பா
உமக்கு நன்றியப்பா - இயேசப்பா
உமக்கு நன்றியப்பா

நினைப்பதற்கும் மேலாக
நன்மை தருபவரே
நாம் நினைப்பதற்கும் மேலாக
கிரியை செய்பவரே
எல்ஷடாய் நீங்க தானே
வல்லமை உடையவரே

நாம் யோர்தானை கடக்கும்போது
எங்கள் கரங்களை பிடித்தவரே
எரிகோவை தகர்த்திடவே 
உங்க சமுகம் முன் சென்றதே
யெகோவா ஷம்மா நீரே
கூட இருப்பவரே

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை - Naan yesuvin pillai bayamae illai


நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்
எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன்

நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்

முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - Ummai allaamal enakku yaar undu


உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு(4)

என் இயேசையா அல்லேலூயா(4)

இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே(2)
எவ்வேளையும் ஐயா நீர்தானே(2)

என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே(2)
என் எல்லாமே ஐயா நீர்தானே(2)

இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே(2)
எந்நாளுமே ஐயா நீர்தானே(2)

எப்படி பாடுவேன் நான் -Eppadi paaduvaen naan


எப்படி பாடுவேன் நான்
எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்கு செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2

ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவர் அல்லோ - 2

எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன் - 2

கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் - 2

அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் - Athi seekkiraththil neengi vidum


அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ

உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது

ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே

காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்

கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே

மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் - Unthan aaviyai neer ootrum


உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் விடுதலை நீர் தாரும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)

ஊற்றிட வேண்டுமே - என்னை 
நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

வானம் திறந்து ஊற்றும்
உம் வல்லமை நீர் ஊற்றும்
என் வாழ்க்கையை நீர் மாற்றும்
ஊற்றுமே (2)

உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
ஊற்றுமே (2)

என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் - With my hands lifted high ummai thuthiththiduvaen


With my hands lifted high உம்மை துதித்திடுவேன்
With my hands lifted high உம்மை துதித்திடுவேன்
Volume raise பண்ணி உயர்த்திடுவேன்
என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்

துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2

உம்மை துதித்திடுவேன்
உம்மை புகழ்ந்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் ஓடிடுவேன் - 2

Jumping and dancing ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)

ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்
ஏழு வழியாக பிடிக்குதைய்யா ஓட்டம் (2)

சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம்
எரிகோ தடைகளை நாம் தூள்தூளாய் தகர்ப்போம் (2)

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் - Seraabeen thoothargal potridum parisuththar


சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் - 2

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா - enakku ummai vittaa yaarum illappaa


எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2)

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2)

உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2) 

நீரே போதும் நீரே போதும் - Neerae pothum neerae pothum


நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2)

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2)

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் (2)

இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே - Aathiyil vaarthaiyaaga iruntha engal yesuve


ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)

இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் (2)

சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே (2)

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2) 

நீர் சொன்னால் போதும் செய்வேன் - Neer sonnaal pothum seivaen


நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே(நேசரே)

ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன் செல்வதால் எனக்கில்ல கவல
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையஐ நிற்பதால் எனக்கேது கவல

பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துகொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே 

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க - Jeevan thantheer ummai aaraathikka


ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க                           
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்  -- 2     

ஆராதனை  ஆராதனை ஆராதனை  ஓ   
நித்தியமானவரே  -- 2 

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர் 
உம்மை என்றும் ஆராதிப்பேன்  -- 2

கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்  -- 2  

வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க 
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்  -- 2  

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் - Nandri solli ummai paada vanthom


நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே 

உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் 

கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் 

வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே