Search a song (Type in tamil for better results)

Friday, February 23, 2018

ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் - Aayirangal paarththaalum Kodu janam irunthaalum

ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும்
ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

ஜீவ நதியே ஜீவ நதியே ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன் - Jeeva Nathiyae Jeeva thaneerukkaai yaengukiraen

ஜீவ நதியே ஜீவ நதியே  ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்
ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ தண்ணீருக்காய் ஏங்குகிறேன்(றோம்)
ஜீவ நதியே ஜீவ நதியே
ஜீவ தண்ணீரை ஊற்றிடுமே

தாகமாக இருப்பவர்கள்
என்னிடத்தில் வாரும் என்றீரே
தாகத்தோடு ஓடி வந்தோம்
ஜீவ நதிகளை திறந்திடுமே

கணுக்கால் அளவு போதாது
முழங்கால் அளவு போதாது
நீச்சல் ஆழத்தில் இழுத்து செல்லும்
உமது ஜீவ நதிக்குள்ளே

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
ஆவியான (உம்) ஜீவ நதியை
எங்கள் மேலே ஊற்றிடுமே

பிரசன்னரே பிரசன்னரே அணைத்து கொள்ளும் பிரசன்னத்தால் - Pirasannarae Pirasannarae Anaiththu kollum

பிரசன்னரே பிரசன்னரே அணைத்து கொள்ளும் பிரசன்னத்தால்
பிரசன்னரே பிரசன்னரே
அணைத்து கொள்ளும் பிரசன்னத்தால்
என் துதிகளை கேட்பவரே
இறங்கி வாரும் ஐயா

ஆராதனை என் இயேசுவுக்கு
ஆராதனை என் இராஜனுக்கே

சீனாய் மலையிலே
மோசேயோடு பேசினீரே
என்னோடு நீர் பேசும் ஐயா

பத்மோஸ் தீவிலே
யோவானுக்கு வெளிப்பட்டீரே
என் கண்களை திருப்பிடும்
உம முகத்தை பார்க்கணுமே

ஒரேப் பர்வதத்தில்
எலியாவை தேற்றினீரே
என்னையும் நீர் தேற்றுமையா