Search a song (Type in tamil for better results)

Tuesday, August 30, 2016

எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி - Enthan Aaththumavae Karththarai thuthi


எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி 
எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி 
கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே 
என்றென்றும் ஸ்தோத்தரி

அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே 
கன்மலைமேல் என்னை நிறுத்தினீரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே 
ஆயிரம் நாவுகள் போதாதே

நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே

நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும் 
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் - Naesarae Um thiru paatham amarnthaen


நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

பலியான செம்மறி பாவங்களெல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

உயிரோடு எழுந்தவரே - Uyirodu ezhunthavarae


உயிரோடு எழுந்தவரே



உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா (4)

இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - Yesu nallavar Yesu nallavar


இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
என்றென்றும் மாறாதவர்
அவர் என்றென்றும் மாறாதவர்

குருடரின் கண்களை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் - Santhoshamaayirungal eppozhuthum


சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்கள் -2
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும் -2
நம்மை காண்கின்ற தேவன் 
நம்மோடிருப்பதால்

விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழி நடத்தும் தேவன் 
நம்மோடிருப்பதால்

தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் 
நம்மோடிருப்பதால்

Wednesday, August 24, 2016

எனக்காய் ஜீவன் விட்டவரே - Enakkaai Jeevan Vittavarae


எனக்காய் ஜீவன் விட்டவரே
எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே 
என்னை சந்திக்க வந்திடுவாரே

இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே

பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்

மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்