Search a song (Type in tamil for better results)

Wednesday, February 24, 2016

அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே - Arputha Yesu rajane Uththama manaalane


அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல்

என் கோட்டை என் துருகம் - நான்
நம்பினவர் என் அடைக்கலம்

கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள்
என் ராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு

நேற்று இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன்
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு

ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர்
இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர்
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார்
எனக்குரியவர் என் இயேசு

உயிரோடு எழுந்த இயேசுவே - Uyirodu ezhuntha yesuve naan vaazhuven


உயிரோடு எழுந்த இயேசுவே
உயிரோடு எழுந்த இயேசுவே 
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்

என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே சமாதான காரனரே

ஹாலேலூயா ஹாலேலூயா 

மரித்து போன அந்த லாசாரு
அன்று தேடியே இயேசு வந்தீரே
உங்கள் வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே 
அந்த எதிரியை ஜெயித்தீரே

Friday, February 19, 2016

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் - Nandri Nandri Nandri entru thuthikkiren


நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா இயேசையா

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேயப்பவரே

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் - Singaasanathil veetirukkum parisuthare


சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் 
பரிசுத்தரே பரிசுத்தரே

ஆராதனை உமக்கு ஆராதனை -2

கேரூபீன்கள் சேராபீன்கள்
பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே

ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே

இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை கரங்களில் உடையவரே

அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே

பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - Yesu enakku jeevan thanthaare


இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே (4)

துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)

சமாதானம் தந்தார் இயேசு

புதுவாழ்வு தந்தார் இயேசு

விடுதலை தந்தார் இயேசு

வல்லமை தந்தார் இயேசு 

அபிஷேகம் தந்தார் இயேசு

தேவ தேவனைத் துதித்திடுவோம் - Deva Devanai thuthiththiduvom


தேவ தேவனைத் துதித்திடுவோம்
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே

எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்

நான் நானாகவே வந்திருக்கிறேன் - Naan Naanaagave Vanthirukkiraen


நான் நானாகவே வந்திருக்கிறேன்
நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன்

மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Friday, February 5, 2016

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் - Yehova Devanukku Aayiram Naamangal


யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன் - என்
கர்த்தாதி கர்த்தர் செய்த நண்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

யேகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யேகோவா ரூவா யெகோவா ராஃபா (2)

எல்ரோயீக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரைய்யா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரய்யா
நான் தாகத்தோடு வந்த போது 
ஜீவத் தண்ணீர் எனக்கு தந்து 
தாகம் எல்லாம் தீர்த்தீரையா

எல்ஷடாயும் நீங்கதாங்க
சர்வவல்ல தேவனாக
என்னை என்றும் நடத்த்துவீங்க
எபிநேசரும் நீங்கதாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க 

ஏலோஹீமும் நீங்கதாங்க
என்றுமுள்ள தேவன் நீங்க
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்கதாங்க
மன்ணில் வந்த தேவன் நீங்க 
இன்றும் என்றும் பாடுவேங்க

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு - Jeyam kodukkum devanukku


ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன்

அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார்

நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பார்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார்

உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பார்
உறங்குவதில்லையே