Search a song (Type in tamil for better results)

Friday, July 15, 2016

உள்ளம் எல்லாம் உருகுதய்யா ( இந்த தெள்ளுப் பூச்சிக்கு ) - Ullam ellaam uruguthaiyaa ( Intha thellu poochchikku )


உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
அன்பை நினைக்கையிலே

தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது

இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை
நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே

கருவினில் அநாதையானேன்
தெருவினில் நான் கிடந்தேன்
அருகினில் வந்து என்னை
அணைத்த அன்பு தெய்வமே
அற்புதமே அதிசயமே உம்மை
நான் என்றும் மறவேன்

தேற்றிட ஒருவரில்லை
ஆற்றிட யாருமில்லை
தூற்றிட பலருண்டு
சேற்றை வீசும் மனிதருண்டு
ஏற்றிடும் என் விளக்கை
தேற்றும் எந்தன் தெய்வமே
சற்பரனே பொற்பரனே உம்மை
நான் என்றும் துதிப்பேன்

ஊரெல்லாம் சென்றிடுவேன்
உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
தெருவெல்லாம் ஏசுவே என்று
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆளுகை செய்யும் என்னை
எந்தன் அன்பு தெய்வமே
உம்மையன்றி இவ்வுலகில்
ஆறுதல் எனக்கு யாருமில்லை

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் - Saenaigalin karththar nammodirukkiraar


சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம்

பூமி நிலை மாறினாலும்
மலைகள் பெயர்ந்து போனாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும்
நாம் பயப்படோம்

தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா
கருத்துடனே போற்றி பாடுவோம்
யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர்
தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம்

தேவன் மகா உன்னதமானவர்
கெம்பீரமாக போற்றி பாடுவோம்
கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்
துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம்

கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்
பயத்துடனே போற்றி பாடுவோம்
தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர்
அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம்

தேவன் நமது இரட்சணயக் கன்மலை
ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம்
கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம்

தேவன் சத்தியத்தோடு நியாயந் தீர்ப்பார்
பயத்துடனே அவரை சேவிப்போம்
அவர் சீக்கிரமாய் நியாயந் தீர்க்க வருகிறார்
பரிசுத்தமாய் அவரை கிட்டி சேருவோம்

இயேசு நல்லவர் - நம் இயேசு பெரியவர் - Yesu nallavar - nam yesu periyavar


இயேசு நல்லவர் - நம் இயேசு பெரியவர்
இயேசு நல்லவர் - நம்
இயேசு பெரியவர்
இயேசு உன்னதர்
சர்வ லோகத்தின் ஆண்டவர்

நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர்

வியாதியால் வருந்திடும் உனக்கு
சுகம் தரும் தெய்வம் நம் இயேசு
சாபங்கள் யாவையும் நீக்கி - உன்னை
வாழ வைக்கும் தெய்வம் இயேசு

மரண பயம் சூழ்ந்த உன்னை
விடுவிக்க வல்லவர் இயேசு
இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ
ஒளியை ஏற்றுவார் இயேசு

ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்
புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு
தோல்வியை சந்தித்த உனக்கு
ஜெயத்தைத் தருபவர் இயேசு

நன்றியோடு அவர் வாசல் ( கர்த்தர் நல்லவர் ) - Nandriyodu avar vaasal ( Karththar nallavar )


நன்றியோடு அவர் வாசல் ( கர்த்தர் நல்லவர் )
நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்

கர்த்தர் நல்லவர் - அவர்
கிருபை என்றென்றும் உள்ளது

எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்

இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்

நான் வித்தியாசமானவன் - Naan vithyaasamaanavan


நான் வித்தியாசமானவன்
நான் வித்தியாசமானவன் -2

இயேசு என்னை இரட்சித்தார்
ஒ...ஓ....ஓ....ஓ...
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
ஓ...ஓ.....ஓ......ஓ.....

இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்

ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது
பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது

இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது
எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்

உம்மை ஆராதிக்கின்றோம் - Ummai aaraathikkintrom


உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

எழுப்புதலே எங்கள் வாஞ்சை - Ezhupputhalae engal vaanjai


எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா-2
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்-2

அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்துவிட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்

இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்
ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமே
ஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்

எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் ஏசுவை காண வேண்டும்

எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளை தூய்மையாக்கும்.

யார் வார்த்தையை நீ நம்புவாய் - Yaar vaarththaiyai nee nambuvaai


யார் வார்த்தையை நீ நம்புவாய்
யார் வார்த்தையை நீ நம்புவாய்
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2

சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்

தூய ஆவியானவரே - Thooya aaviyaanavarae


தூய ஆவியானவரே
தூய ஆவியானவரே
உம்மை வரவேற்கிறோம்
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
உம் மகிமையால் நிரப்பிடும்

உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே - Unthan maha parisuththa sthalathukkullae


உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்

உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்

உயிர்தெழுந்த நம் இயேசு - Uyirthezhuntha nan yesu


உயிர்தெழுந்த நம் இயேசு
உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

நானே உன்னை சுகமாக்கும் - Naanae unnai sugamaakkum


நானே உன்னை சுகமாக்கும்
நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்

நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்

நான் என் நேசருடையவன் - Naan en naesarudayavan


நான் என் நேசருடையவன்
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்


உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை - Ummaal aagaatha kaariyam ontrum illai


உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை



உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா 
எல்லாமே உம்மால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும், உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)