Search a song (Type in tamil for better results)

Wednesday, August 26, 2015

யாக்கோபென்னும் சிறு பூச்சியே - Yaakobennum siru poochiye


யாக்கோபென்னும் சிறு பூச்சியே
யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீ
ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

அழைத்தவர் கைவிடுவாரோ
இல்லை இல்லை இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ
இல்லை இல்லை இல்லை
பெயர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமை படுத்திடுவார்

பலவீனன் ஆவதில்லை
இல்லை இல்லை இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை

வியாதிகள் வருவதில்லை
இல்லை இல்லை இல்லை
வாதிகள் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை
ஆண்டுகள் முடிவதில்லை
அவர் கிருபையும் விலகுவதில்லை

Thursday, August 20, 2015

தேவா நான் எதினால் விசேஷித்தவன்


தேவா நான் எதினால் விசேஷித்தவன்
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு இருப்பதினால்

மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே --- தேவா

தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் --- தேவா

வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒருமரம் கூடவருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு --- தேவா

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை


போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் - (2)

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - (2)

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் - (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் - (இயேசு)

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்  - (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - (இயேசு)

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் - (இயேசு)

ஆராதனை ஆராதனை துதி


ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை – (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே – (2)

தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை – (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை – (2) - ஆராதனை

ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை – (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை – (2) - ஆராதனை

இதோ மனிதர்கள் மத்தியில்



இதோ மனிதர்கள் மத்தியில்
இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே எங்கள்
மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்

உம்மை விட்டு வாழ முடியாதையா



உம்மை விட்டு வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
உம் அன்பை பிரிந்து வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையா

என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

ஒரு தாயை போல என்னை தேற்றிநீரே
ஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே

ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்
என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்
என் அன்பே என் உயிரே
நீரே என் ஜீவனே