Search a song (Type in tamil for better results)

Thursday, May 19, 2016

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே - Kalangina nerangalil kai thooki eduppavarae


கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை

தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ

மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை.


என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி - Ennai valladikku neekki karangalaal thookki


என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்

எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன்

ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்

ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்


இதுவரை நடத்தி குறைவின்றி காத்து - Ithuvarai nadaththi kuraivintri kaaththu


இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்

ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

ஆராதனை நாயகன் நீரே - Aaraathanai naayagan neerae


ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

சரணங்கள்

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன்

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே

முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன்

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே - Ninaivellaam yekkamellaam Vaanjayellaam neere


நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே
நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் 
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே, என் உயிரே

மழைக்காக காத்திருக்கும் 
பயிர் போல நான் காத்திருந்தேன்
கீழ்காற்று வீசும் என்று 
ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே 
என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே, என் உயிரே

தாயின்றி தகப்பனின்றி 
தனிமையிலே எந்தன் துணை என்பேன்
சிநேகிதரே சிறந்தவரே 
மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே 
மணவாளன் என் இயேசுவே 
என் அன்பே, என் உயிரே

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே - Vaathai unthan koodaaraththai anukaathu magane


வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்

ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு

கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்

அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்

ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் - Entrum Aanandham en yesu tharukiraar


என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்து கொண்டேயிருப்பேன்

அல்லேலூயா ஆனந்தமே (2)

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

வழிகளிலெல்லால் என்னைக் காக்க
துதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல‌
அதிகாரம் எனக்குண்டு

இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரது அடைக்ககம்

ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்