Search a song (Type in tamil for better results)

Friday, October 9, 2015

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே


உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)
உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை தேற்றிட  யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்...(3) -என் தெய்வமே
உம்மை நான் போற்றுகிறேன்
(வாழ்த்துகிறேன்) (வணங்குகிறேன்)
என் தெய்வமே....என் ஏசுவே...என் தெய்வமே

உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்


உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே

துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர்

ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே

ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்

தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்


தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும்

சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே

பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரோ

துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே

பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

தந்தேன் என்னை இயேசுவே


தந்தேன் என்னை இயேசுவே
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
 உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்

ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்

உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்

கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும்

ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

பயப்படாதே மகிழ்ந்து களிகூரு


பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
கர்த்தர் மாபெரும் காரியம் செய்திடுவார்

வனாந்திரம் செழிப்பாய் மாறிவிடும்
வறண்ட உன் வாழ்வு வளமாகும்
வற்றாத நீரூற்று போல் இருப்பாய்
வல்லவர் இயேசுவால் எல்லாம் கூடும்

இழந்ததை மீண்டும் கண்டிடுவாய்
இன்னல்கள் யாவையும் தேற்றிடுவார்
இல்லாமை என்பது உனக்கு இல்லை
எல்லாமே இயேசுவால் நடந்திடுமே

ஆவியின் வல்லமை இறங்கிடுமே
வாலிபர் தரிசனம் கண்டிடுவார்
தேசத்தில் எழுப்புதல் பரவிடவே
தரிசனம் பெற்றவர் புறப்படுவார்

என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - En Devanaal koodaathathu ontrum illai


என் தேவனால் கூடாதது 
என் தேவனால் கூடாதது 
ஒன்றும் இல்லை எதுவும் இல்லை
மனிதனால் கூடாததை 
வைக்க செய்யும் தேவன் அவர்

மோசேயின் தேவன் என் தேவன் 
அதிசயங்கள் செய்திடுவார்
செங்கடல் நடுவே பாதை திறந்து
என்னை நடத்திட வல்லவரே

எலியாவின் தேவன் என் தேவன்
வல்ல காரியம் செய்திடுவார்
காகத்தை அனுப்பி எந்தன் தேவையை 
பூர்த்தி செய்ய வல்லவரே

தாவீதின் தேவன் என் தேவன்
யுத்தங்களை அவர் செய்திடுவார்
எதிரி முன்பு எந்தன் தலையை 
உயர செய்ய வல்லவரே