Search a song (Type in tamil for better results)

Thursday, May 25, 2017

அன்புள்ளம் கொண்டவரே ஆவியானவரே - Anbullam kondavarae aaviyaanavarae


அன்புள்ளம் கொண்டவரே ஆவியானவரே
அன்புள்ளம் கொண்டவரே ஆவியானவரே
அபிஷேக நாதனே அக்கினி மழையாய் வாரும்

கரம் உயர்த்தி உம்மை துதிக்கிறோம்
கரம் விரித்து உம்மை அழைக்கிறோம்

அற்புத தெய்வமே அப்பா பிதாவே
அகிலம் அரசாள இராஜாவே வாருமே

Thursday, May 18, 2017

திருப்பாதம் நம்பி வந்தேன் - Thiruppatham nambi vanthaen


திருப்பாதம் நம்பி வந்தேன்
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பலன் ஈந்திடுமே

உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீரே - En devanae en devanae yaen ennai kai vitteerae


என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீரே
என் தேவனே என் தேவனே
ஏன் என்னை கை விட்டீரே
என்றழுத ஓசை ஓன்று 
கல்வாரியில் தொனித்ததே

என் பாவத்திற்காய் அடிக்கப்பட்டீரே
என் மீறுதல்க்காய் நொறுக்கப்பட்டீரே
எனக்காகவே நீர் பலியானீரே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்

எனக்காக சிலுவை சுமந்தவரே
எனக்காக பாடுகள் சகித்தவரே
எனக்காக நிந்தைகள் ஏற்றவரே
உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன் - ஐயா

உம் ஏக்கத்தை நான் தெரிந்துகொண்டேன்
உம் அன்பை உலகிற்கு கொண்டு செல்வேன்
உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உம் தாகத்தை நான் தீர்த்து வைப்பேன் - ஐயா