Search a song (Type in tamil for better results)

Saturday, December 19, 2015


பரலோகமே என் சொந்தமே
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ 
என் இன்ப இயேசுவை 
நான் என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்

சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே எனது இலட்சியமே

இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன்

பரம சுகம் காண்பேன்
பரம தேசம் அதில் சேர்வேன்
ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

அழைப்பின் சத்தம் கேட்டு நானும்
ஆயத்தமாகிடுவேன் நாட்களும்
நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

பளிங்கு நதியோரம் சுத்தர்
தாகம் தீர்த்திடுவார் தூதர்கள்
பாடிட தூயனை தரிசிப்பேன்

பரலோகமே என் சொந்தமே - Paralogame en sonthamae


பரலோகமே என் சொந்தமே
பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ 
என் இன்ப இயேசுவை 
நான் என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்

சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே எனது இலட்சியமே

இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன்

பரம சுகம் காண்பேன்
பரம தேசம் அதில் சேர்வேன்
ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

அழைப்பின் சத்தம் கேட்டு நானும்
ஆயத்தமாகிடுவேன் நாட்களும்
நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

பளிங்கு நதியோரம் சுத்தர்
தாகம் தீர்த்திடுவார் தூதர்கள்
பாடிட தூயனை தரிசிப்பேன்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் - Jeevikkiraar yesu jeevikkiraar


ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

என் இயேசுவே நான் என்றும் - En yesuve naan entrum


என் இயேசுவே நான் என்றும்
என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும்
வழி நடத்தும்

உளையான சேற்றினின்று
தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனைப் போற்றிடுவேன்

அலைந்தோடும் கடல்தனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும்

தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனைப் பின் செல்லுவேன்

அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும்

ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான்
உந்தனைத் தேடுகிறேன்.

எந்த நிலையில் நானிருந்தாலும் - Entha nilayil naan irunthaalum


எந்த நிலையில் நானிருந்தாலும்
எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் ஒருவரே

நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகடிப்பார்கள்

கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்

பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்

அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள்

பிறந்தார், பிறந்தார் வானவர் - Piranthaar Piranthaar vaanavar


பிறந்தார், பிறந்தார் வானவர்
பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மாதேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மாஜோதியாய் திகழ்ந்தார்

பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்
மேலான நாமம் பேற்றார்

இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் 

நம்பத்தக்க தகப்பனே - Nambathakka thagappanae


நம்பத்தக்க தகப்பனே
நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே

வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்

இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்

நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்

பெத்தலையில் பிறந்தவரை - Beththalayil piranthavarai


பெத்தலையில் பிறந்தவரை
பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

கண்டேனென் கண்குளிர - Kanden en kan kulira


கண்டேனென் கண்குளிர 
கண்டேனென் கண்குளிர 
கர்த்தனை இன்று 
கண்டேனென் கண்குளிர   
கொண்டாடும் விண்ணோர்கள் 
கோமானைக் கையிலேந்திக்   

பெத்தலேம் சத்திர முன்னணையில் 
உற்றோருக் குயிர்தரும் 
உண்மையாம் என் ரட்சகனை   

தேவாதி தேவனை தேவ சேனை 
ஓயாது ஸ்தோத்திரிக்கும் 
ஒப்புநிகர் அற்றவனை   

பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை  
ஆவேந்தர் அடிதொழும் 
அன்பனை என் இன்பனை நான்   

மண்ணோர் இருள் போக்கும் மா மணியை 
விண்ணோரும் வேண்டிநிற்கும் 
விண்மணியைக் கண்மணியை   

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை 
கண்டோர்கள் கலிதீர்க்கும் 
காரணனை பூரணனை

அதி மங்கல காரணனே - Athi mangala kaarananae


அதி மங்கல காரணனே 
அதி மங்கல காரணனே 
துதி தங்கிய பூரணனே- 
நரர் வாழ விண் துறந்தோர் 
ஏழையாய்ப் பிறந்த 
வண்மையே தாரணனே!   

மதி மங்கின எங்களுக்கும் 
திதி சிங்கினர் தங்களுக்கும்- 
உனின் மாட்சியும் திவ்விய 
காட்சியும் தோன்றிட 
வையாய் துங்கவனே   

முடி மன்னர்கள் மேடையையும் 
மிகு உன்னத வீடதையும் - 
நீங்கி மாட்டிடையே பிறந் - 
தாட்டிடையார் தொழ 
வந்தனையோ தரையில்   

தீய பேய்த்திரள் ஒடுதற்கும் 
உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் -
உனைப் பின்பற்றுவோர் முற்றும் 
துன்பற்று வாழ்ந்தற்கும் 
பெற்ற நற்கோலம் இதோ

அதிகாலையில் பாலனை தேடி - Athikaalayil paalanai thedi


அதிகாலையில் பாலனை தேடி
அதிகாலையில் பாலனை தேடி 
செல்வோம் நாம் யாவரும் கூடி 
அந்த மாடடையும் குடில் நாடி 
தெய்வ பாலனை பணிந்திட வாரீர் 

அதிகாலையில் பாலனை தேடி 
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்   

அன்னை மரியின் மடி மேலே 
மன்னன் மகவாகவே தோன்ற 
விண் தூதர்கள் பாடல்கள் பாட 
விரைவாக நாம் செல்வோம் கேட்க   

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே 
அந்த முன்னணை முன்னிலை நின்றே 
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் 
நல் காட்சியை கண்டிட நாமே

ஆதி திருவார்த்தை திவ்ய - Aathi thiru vaarthai dhiviya


ஆதி திருவார்த்தை திவ்ய 
ஆதி திருவார்த்தை திவ்ய 
அற்புத பாலனாக பிறந்தார் 
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட 
ஆதிரையோரை யீடேற்றிட   

மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து 
மரியாம் கன்னியிட முதித்து 
மகிமையை மறந்து தமை வெறுத்து 
மனு குமாரன் வேஷமாய் 
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் 
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் 
உன்னத காதலும் பொருந்தவே சர்வ 
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்   

தாம் தாம் தன்னர வன்னர 
தீம் தீம் தீமையகற்றிட 
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ- 
ஷமென சோபனம் பாடவே 
இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது 
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட   

ஆதாம் ஓதி ஏவினார் 
ஆபிரகாம் விசுவாசவித்து 
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் 
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்   

பூலோக பாவ விமோசனர் 
பூரணக் கிருபையின் வாசனர் 
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் 
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்   

அல்லேலூயா சங்கீர்த்தனம் 
ஆனந்த கீதங்கள் பாடவே 
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட 
அற்பரன் மெய்பரன் தற்பரனார். 

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள் - Naan nadanthu vantha paathaigal


நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

நடக்க முடியல டாடி நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க - கரத்தில்
ஏந்திக்கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
ஓட முடியல - என் மன பெலத்தால்
நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
சுமக்க முடியல - என் கால் பெலத்தால்
கடந்து பார்த்தேன் கடக்க முடியல

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
ஆள முடியல - என் பண பெலத்தால்
படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
ஒன்றும் முடியல - என் வாய் பெலத்தால்
வாழப் பார்த்தேன் வாழ முடியல

வாக்குப் பண்ணினவர் மாறிடார் - Vaakku panninavar maaridaar


வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே - நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் - உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் - Kadanthu vantha paathaigalai thirumbi paarkiraen


கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி

அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

நம்பத்தக்க தகப்பனே - Nambathakka thagappanae


நம்பத்தக்க தகப்பனே
நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே

வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்

இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்

நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்

இடைவிடா நன்றி உமக்குத்தானே - Idai vidaa nandri umakkuthaanae


இடைவிடா நன்றி உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

நன்றி.நன்றி,........

தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா

நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

உகந்த காணிக்கையாய் - Ugantha kaanikkayaai


உகந்த காணிக்கையாய்
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா

தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்

வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்

அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

அபிஷேகம் என்மேலே - Abisekam enmelae


அபிஷேகம் என்மேலே
அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே

இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்

சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்

துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்துக்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே

கிருபையின் கால இதுவன்றோ
அறிவிக்கணும் அதிவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே

என்னை நடத்திடும் தேவன் - Ennai nadaththidum devan


என்னை நடத்திடும் தேவன்
என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே

பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்

பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே

முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே

அல்லேலூயா -6
ஒசன்னா -6

என்னை உம் கையில் - Ennai um kaiyil


என்னை உம் கையில்
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவரே - Vaakkuraithavarae neer unmai ullavarae


வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவரே
வாக்குரைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்

காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்

பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே

நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்

வேலைக்காரன் கண்கள் - Velai kaaran kangal


வேலைக்காரன் கண்கள்
வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்

நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே

கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்

சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் - Jeba aavi ootri jebikka seiyum


ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறானுமே நாம் ஜெபிக்கணுமே

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே

உணவை தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நாம் கதறணுமே

சுகம் உண்டு பெலன் உண்டு - Sugam undu Belan undu


சுகம் உண்டு பெலன் உண்டு
சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்

அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்

வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்

உயர்த்துகிறோம் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகப்படுத்தும் பெலப்படுத்து
திடப்படுத்தும் இந்நேரத்தில்

உயர்த்துகிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே