Search a song (Type in tamil for better results)

Friday, June 16, 2017

அப்பா நான் தவறு செய்தேன் - Appaa naan thavaru seithaen


அப்பா நான் தவறு செய்தேன்
அப்பா நான் தவறு செய்தேன்
உம அன்பை உதறி சென்றேன்
நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன்
எமை கண் பாரும் உந்தன் பிள்ளை நான்

சுமைகளில் சோர்ந்தோரை 
என்னிடத்தில் வாரும் என்றீர்
அந்த ஆறுதல் வார்த்தை என்னை
இன்று உம்மிடத்தில் ஈர்த்ததைய்யா 

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
நீர் என்று அறிந்த பின்னும்
வேறு எங்கு நான் போவேன்
எந்தன் புகலிடம் நீரே அப்பா

பாடி வரும் பறவைகளும்
காடுகளில் மிருகங்களும்
உம அன்பில் மகிழ்ந்திருக்க
நான் உம்மை பிரிந்து நொந்தேன்

என் ஆத்துமாவும் சரீரமும் - En aathmaavum sareeramum


என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

அப்பா உம் திருசித்தம் - என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

நீங்க போதும் இயேசப்பா - Neenga pothum yesappaa


நீங்க போதும் இயேசப்பா
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே