Search a song (Type in tamil for better results)

Friday, December 2, 2016

உம் நாமம் எத்தனை இன்பம் அது மேன்மையும் கூட - Um naamam eththanai inbam athu maenmaiyum kooda


உம் நாமம் எத்தனை இன்பம் அது மேன்மையும் கூட
உம் நாமம் எத்தனை இன்பம் 
அது மேன்மையும் கூட
பருக பருக தெவிட்டாத 
திராட்ச்சை இரசம் கூட
அன்பே ஆராதனை 
அழகே ஆராதனை

கிச்சிலி மரமே நேச தைலமே 
மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை

எந்தன் பிரியமே ஆத்ம நேசரே
ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை

இனிமையானவரே மதுரமானவரே
அழகில் சிறந்தவரே ஆராதனை

என்னை கவர்ந்த நேசர் 
அவர் என்னுடையவர்
இன்று முதல் நானும் 
கூட அவருடையவன்

ஒரு தந்தையை போல என்னை தோளில் சுமந்தவர் - Oru thanthaiyai pola ennai tholil sumanthavar


ஒரு தந்தையை போல என்னை தோளில் சுமந்தவர்
ஒரு தந்தையை போல 
என்னை தோளில் சுமந்தவர்
ஒரு தாயினும் மேலாய் 
என்னில் அன்பு வைத்தவர்
அவர் யார் யார் யார் தெரியுமா 
பெத்தலையில் பிறந்தவராம் 
சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை மன்னிக்க வந்தவராம்
அவர் யார் யார் யார் தெரியுமா 


உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலக தோற்றம் முதல் அறிஞ்சு கொண்டவர் அவரே
உனக்காக பாடுகளை ஏற்றுக்கொண்டாரே
உன்னை மீட்க்க தன் உயிரை தந்து விட்டாரே
அவர் தான் (3) இயேசு


மரித்து விட்டார் இயேசு என்று கவலை படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் என்ற தொனி மறந்து விட்டாரே
நீவணங்கும் தெய்வம் கல்லும் மண்ணும் அள்ளியே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வம்
அவர் தான் (3) இயேசு