Search a song (Type in tamil for better results)

Thursday, January 11, 2018

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே - Ganathirkkum magimaikkum paathirarae

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா  - உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை

இரண்டு மூன்று  பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருக்கிறேன் என்றீரே  - என் துதியில்  வாழ்பவரே

அநேக ஸ்தோத்திரத்தால் உம் கிருபை  பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது  உங்க மகிமை விளங்குதப்பா

உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்துடுவீர் எங்களை ஆசீர்வதித்திடுவீர்  

எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே - Ellaam koodumae Ellaam koodumae

எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்
எல்லாம் கூடுமே – 2

மழை வந்தாலும் பயமில்லை
அலை வந்தாலும் பயமில்லை
புயலடித்தாலும் பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2

தண்ணீர் ரசமாய் மாறிற்றே
கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் குறைவுகள் நீங்கிற்றே
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் வாழ்க்கை மாறிற்றே 

தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
பாரங்கள் எல்லாம் போனதே
என் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் சூழ்நிலை மாறினது
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் ஊழியம் மாறினது 

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் - Valaakkaamal ennai thalai aakkineer

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

புது வாழ்வு தந்தவரே - Puthu vaazhvu thanthavarae

புது வாழ்வு தந்தவரே
புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

(உம்) பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்