Search a song (Type in tamil for better results)

Saturday, September 17, 2016

உனக்கொருவர் இருக்கின்றார் - Unakkoruvar irukintraar


உனக்கொருவர் இருக்கின்றார்
உனக்கொருவர் இருக்கின்றார்
உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்

சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை

ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே என்று 
உன்னை தேற்றிட்வே

வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச்
சொல்லிப் புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே

கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம 
கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று 
சொல்வதெல்லாம் சும்மாங்க 
யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க

No comments:

Post a Comment