Search a song (Type in tamil for better results)

Friday, October 9, 2015

தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்


தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும்

சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே

பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரோ

துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே

பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

No comments:

Post a Comment