Search a song (Type in tamil for better results)

Friday, October 9, 2015

பயப்படாதே மகிழ்ந்து களிகூரு


பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
கர்த்தர் மாபெரும் காரியம் செய்திடுவார்

வனாந்திரம் செழிப்பாய் மாறிவிடும்
வறண்ட உன் வாழ்வு வளமாகும்
வற்றாத நீரூற்று போல் இருப்பாய்
வல்லவர் இயேசுவால் எல்லாம் கூடும்

இழந்ததை மீண்டும் கண்டிடுவாய்
இன்னல்கள் யாவையும் தேற்றிடுவார்
இல்லாமை என்பது உனக்கு இல்லை
எல்லாமே இயேசுவால் நடந்திடுமே

ஆவியின் வல்லமை இறங்கிடுமே
வாலிபர் தரிசனம் கண்டிடுவார்
தேசத்தில் எழுப்புதல் பரவிடவே
தரிசனம் பெற்றவர் புறப்படுவார்

No comments:

Post a Comment