Search a song (Type in tamil for better results)

Saturday, September 17, 2016

வழி தப்பி திரிந்த எனக்கு - Vazhi thappi thirintha enakku


வழி தப்பி திரிந்த எனக்கு
வழி தப்பி திரிந்த எனக்கு 
வாழ்வு தந்த நாயகா
வாழ்நாள் எல்லாம் நானே
விழி இழந்தவர்க்காய் வாழ்வேன்

இருளில் வாழ்வோர் எல்லாம்
இலக்கினை ஒருபோதும் அறியார்
இயேசுவின் ஒளியை பெற்றோர்
இனியும் சும்மா இருக்கலாமோ!

உளையான சேற்றில் மாந்தர் 
உதைத்து பயனின்று அழிகிறார்
உன்னதம் தேடும் விசுவாசியே
உனக்கு கவலை இல்லையா?

கந்தை அணிந்த கர்த்தரை 
சிந்தையில் வைக்க மறந்து
பந்தாவில் மயங்கி நிற்போரை
சொஸ்தமாக்க கூவிடு தேவஜனமே

குற்றுயிராய் கிடக்கிறார் வழியில்
குற்றமில்லா இயேசுவின் இரத்தம் உண்டு
குறைநீக்க நீயும் உதவிடு
குதித்திடு இன்பங்கள் ஒதுக்கியே.

2 comments: