Search a song (Type in tamil for better results)

Friday, March 4, 2016

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் - Uthavi varum kanmalai nokki


உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
உதவி வரும் கன்மலை
நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்க்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்கமாட்டார்

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காக்கின்றார்
அவர் எனது ஆத்துமாவை
அநுதினம் காத்திடுவார்

போகும்போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார்

No comments:

Post a Comment