Search a song (Type in tamil for better results)

Saturday, December 19, 2015

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல - Ummai nambi vanthaen naan vetkkappadala


உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம தயை என்னைக் கை விடல
வெறும் கையாய் நான் கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் 

ஏல் எலோகே ஏல் எலோகே
ஏல் எலோகே உம்மைத் துதிப்பேன்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன் படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்

வேண்டினோர் எல்லாம் விடை பெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

No comments:

Post a Comment