போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் - (2)
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - (2)
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் - (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் - (இயேசு)
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் - (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - (இயேசு)
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் - (இயேசு)

No comments:
Post a Comment