Search a song (Type in tamil for better results)

Thursday, May 14, 2015

உயரமும் உன்னதமுமான ( Uyaramum unnathamum )



உயரமும் உன்னதமுமான

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
பரிசுத்தர் பரிசுத்தரே

ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்

No comments:

Post a Comment